சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்ற நடவடிக்கைகளை உறுதி செய்து ஐ.நா.சபை வெளியிட்ட அறிக்கையை அவமதிக்கும் ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க பாராளுமன்றத்தை உடனே கூட்ட வலியுறுத்தியும் சென்னை மெமோரியல் ஹால் முன்பு விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார்.
ரவிகுமார் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி சங்கதமிழன், மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், மாநில துணை செயலாளர் சுபமோகன், மாநில செய்தி தொடர்பாளர் வன்னி அரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




Post a Comment